Durai Blog

Shopping cart

Subtotal: $4398.00

View cart Checkout

Begin your transformative diabetes and foot care journey with us. From personalized treatment plans to compassionate support, we are committed to guiding you towards improved health and well-being every step of the way.

நீரிழிவு நோயால் அவதியா? சரியான சிகிச்சை முறை, பராமரிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நம்மில் பெரும்பாலானோர் நினைப்பது போல நீரிழுவு நோய் சாதாரண உடல் பிரச்சனை அல்ல. சரியான மருத்துவம், சரியான பராமரிப்பு, இல்லையெனில், பிரச்சனையின் வீரியம் அதிகரித்து, இதய கோளாறு, கண் பார்வையிழத்தல், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், ஆகியவற்றில் தொடங்கி, அதிகபட்சமாக மரணம் கூட நேரிடலாம்.  18 வயதுக்கு மேலான 77 மில்லியன் இந்தியர்கள் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இன்னும் 25 மில்லியன் மக்கள் வரும் வருடங்களில் நீரிழுவு நோயால், பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

விழிப்புணர்வற்ற மக்கள்:

எல்லா காரியங்களுக்கும், மக்களிடம் வித விதமான புரிதல், வித்தியாசமான கருத்துக்கள் இருப்பது இயல்பு. ஒருவரின் கருத்து மற்றவர்க்கு ஒத்திசையாது. நீரிழிவு நோய் பற்றிய புரிதல் என்று வரும் போதும், மக்கள் இரண்டு வகையாக தான் இருக்கிறார்கள். சிலர், நீரிழிவு நோயெல்லாம் ஒரு பொருட்டல்ல என்கிறாரர்கள், சிலர், காய்ச்சல், தலைவலி போல நீரிழுவு நோயும் சில காலம் கழித்து போய்விடும் என்றிருக்கிறார்கள், வேறு சிலர், தங்களுக்கு நீரிழுவு நோய் தாக்கம் ஏற்பட்ட அறிகுறியே தெரியாமல், வாழ்கிறார்கள், வேறு சில வகையறா, நீரிழிவு நோய் நம்மை என்ன செய்து விடும்? என்று சரியான மருத்துவமுறை இன்றி, மனம் போல வாழ்கிறார்கள். நீங்களும் இந்த வகைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால், இந்த நீரிழிவு நோய் பற்றிய இந்த பதிவு உங்களுக்கு ஒரு கண்திறப்பாக இருக்கும்.

நீரிழிவு நோய் என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது, அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.

1. நீரிழிவு நோய் என்றால் என்ன?

இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று சிலர் நினைப்பதில் தவறில்லை. எனினும், அதிகப்படியாக , தொடர்ச்சியாக, உணவில் சர்க்கரை சேர்ப்பவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் இன்சுலின் சுரத்தலில் ஏற்படும் சிக்கல்கள் தான் நீரிழிவு நோயாகிறது. ரத்தத்தில் உற்பத்தியாகும் சர்க்கரையை, உடலுக்கு தேவையான ஆற்றலை தர செல்களுக்கு அனுப்பப்படும் செயல்முறை தட்டுப்படும்போது , நீரிழிவு நோய் ஏற்படுகிறது. தேவையான இன்சுலினை உடலால் உற்பத்தி செய்ய முடியாததும், ஏற்கனவே இருக்கும் இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்தாமல் இருப்பதாலும், நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

2. நீரிழிவு நோய் வகைகள்:

மிகவும் பொதுவான நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும்.                                             

வகை ஒன்று : இந்த வகையில், கணையத்தில் இன்சுலின் சுரக்கவே சுரக்காது. தினசரி தேவைக்கான இன்சுலினை மருந்தாக உட்செலுத்திக்கொள்ள வேண்டும். சிறுவர்கள் பெரியவர்கள் என, எல்லா வயதினரையும் இந்த வகை ஒன்று நீரிழிவு நோய் பாதிக்கிறது.

வகை இரண்டு:

இந்த வகையில், உடல், இன்சுலினை சரியாக பயன்படுத்தாது. அல்லது, உடலுக்கு தேவையான இன்சுலின் உற்பத்தியே ஆகாது. உடல் பருமன், அசைவற்ற உடல், சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது. இந்த வகையானது பெரும்பாலும் பெரியவர்களையே தாக்கும் எனினும், எந்த வயதில் இருப்பவர்களும், இதனால் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

3. நீரிழிவு நோய் ஏற்பட காரணங்கள்:

சிறியவர்களும், பெரியவர்களும், டைப் 1 டைப் 2 என இரண்டு வகையான நீரிழிவு நோயால் பாதிக்கபட, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம், என பல காரணங்கள் உண்டு.

Autoimmune தாக்கம்:

Autoimmune disorder எனப்படும் தன்னுடல் தாக்கத்தில், இன்சுலின் சுரக்கச்செய்யும் பீட்டா செல்களை, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, தாக்கி சேதப்படுத்துகிறது. டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட இது ஒரு காரணமாயினும், மரபியல், நோய் எதிர்ப்பு அமைப்பு செயலிழப்பு, என வேறு சில காரணங்களும் உண்டு.

உடல் பருமன்:

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கத்தினால், வயிற்றுப்பகுதியில் சேகரிக்கப்படும் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்திக்கொள்ள இயலாது.

மரபியல் பிரச்சனை:

சர்க்கரை நோய் ஏற்பட, குடும்ப வரலாறும் ஒரு முக்கிய காரணமாகிறது. அம்மா, அப்பா, உடன்பிறந்தோர் என முதல் நிலை சொந்தங்கள் நீரிழிவு நோயால் பாதிக்க பட்டிருந்தால் அடுத்துள்ளவர்க்கும் பாதிப்பு ஏற்படும்.

வயது:

வயது மூப்பின் காரணமாக, உடல் சோர்வினால், எந்நேரமும் ஓய்வில் இருப்பது, உடலை வருத்தாமல் வேலை செய்வது, போன்றவற்றால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது. பொதுவாக 45 வயது நிறைந்தவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்கு வேண்டியவரோ 40 வயதுக்கு மேல் இருந்தால், அவசியம் நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கான சரியான பரிசோதனை, பராமராமரிப்புக்கான சரியான இடம்,

Dr .துரை சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு சிறப்பு மருத்துமனை, புதுக்கோட்டை. இங்கு நோய்க்கான எல்லா விதமான சிகிச்சையும் சரியான முறையில் வழங்கப்படும்.

மன அழுத்தம்:

மாறுபட்ட வாழ்க்கை முறையால் ஏற்படும் நீண்ட நாள் மன அழுத்தமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா, உடற்பயிற்சி, தியானம் செய்வதின் மூலம் இந்த பாதிப்பின் சிரமத்தை சமாளிக்கலாம்.

4. நீரிழிவு நோயின் அறிகுறிகள்:

  • மங்கலான பார்வை – ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை, கண் நரம்புகளை பலவீனமாக்குவதால் கண் பார்வை மங்கலாகிறது.

  • அதிக தாகம் – எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தாகம் அடங்காமல், இன்னும் அதிகமாக தண்ணீரோ அல்லது வேறு நீராகாரங்களோ எடுத்துக்கொள்ள தோன்றினால் அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கும்.

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் – நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று இது. ரத்தத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான சர்க்கரை, சிறுநீரகத்தை  அதிகப்படியான வேலை செய்ய வைத்து, பலவீனப்படுத்துகிறது, இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்கிறது.

  • சோம்பல் – பெரிதாக எந்த வேலையும் செய்யவில்லை ஆனால், உடல் தெம்பில்லாமல் சோர்வாவதற்கு உடலின் செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததே காரணம்.

  • அதிக பசி –  உடலால் க்ளுகோஸை சரியாக பயன்படுத்த முடியாததால், சிலர், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசியெடுத்து மீண்டும் சாப்பிட நினைக்கின்றனர். இதுவும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறி.

  • பாத மதமதப்பு –  உயர் ரத்த சர்க்கரையால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, கால் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளில் மதமதப்பு மற்றும் கூச்சம் ஏற்படும்.

5. நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு:

  • தினசரி உணவில் கவனம் தேவை. சாப்பிடும் உணவு சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், குறைவான கொழுப்பு இருக்கும் புரத வகைகள், போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

  • தினசரி குறைந்தது 35 நிமிட உடற்பயிற்சி செய்வதினால் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்திக்கொள்ள உதவும். ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற உடல் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

  • சிகரெட் பழக்கமும், குடி பழக்கமும், நீரிழிவு நோயை இன்னும் மோசமாக்கும். எனவே பழக்கத்தை சிறிது சிறிதாக குறைத்து, முற்றிலும் நிறுத்தி விடுவது நல்லது. இந்த பழக்கத்தினால், நீரிழிவு நோய் முற்றி, பக்கவாதம், உயிரழப்பு கூட ஏற்படக்கூடும்.

  • 8-9 மணி நேர தூக்கம் மிக அவசியம்.

6. மருத்துவரை எப்போது அணுக வேண்டும்:

நீரிழிவு நோயை சமாளிப்பதை விட கடினமான ஒரு வேலை இருக்காது. ஆனால் சரியான மருத்துவம், சரியான பராமரிப்பு மற்றும் தடுப்பு முறை பின்பற்றுவதால், பிரச்சனையின் அளவை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய், அதனால் ஏற்படும் பாத பிரச்சனைகள், நீரிழிவு நோயால் உண்டாகும் வேறு சில உடல் உபாதைகளை கண்டறிந்து, அதற்கேற்ற தகுந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பை, புதுக்கோட்டையில் உள்ள Dr. துரை நீரிழிவு நோய் மற்றும் பாத பராமரிப்பு சிறப்பு மருத்துவமனை உங்களுக்கு உதவும். துறையில் 10 வருடத்துக்கு மேலான அனுபவம், சிறந்த துறை மருத்துவர்கள், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் என சிறந்து விளங்குவதால், உங்கள் உடல் பிரச்சனைக்கு ஏற்ப உணவு பட்டியல் பரிந்துரைத்தல், காலணிகள் பரிந்துரைப்பது என எல்லா பராமரிப்பும் பெற்றுகொள்ளலாம்.

சிகிச்சை பற்றிய தகவல்கள், மருத்துவர் ஆலோசனை, நீரிழிவு நோய் பற்றிய கேள்விகள், போன்றவற்றை தெரிந்து கொள்ள, https://drduraisdiabeticcare.com/ என்ற இணையதள முகவரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்லது,
dr.duraisdiabetes@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கோரிக்கைகளை  அனுப்பலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *